18/11/2022
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.
என் முதல் வகுப்பு ஆசிரியையின் பெயர் சந்தோஷம் டீச்சர். ( தனியாக பெயரை சொன்னதே இல்லை)
ICF elementary பள்ளியில் படித்தேன். சிறு கொண்டை போட்டு பூ வைத்து, கையில் பிரம்புடன் அவர் உருவம் ஓவியமாய் என் நெஞ்சில்.
கணீர் என்ற குரல் வளம்.
அன்பான பார்வை படிப்பை நமக்கு தோழமையாக்கும். 2, 3 ம் வகுப்பு அவ்வளவு நினைவில்லை. அடிக்கடி பேசிக்கொண்டே இருந்ததால் திட்டு கிடைக்கும்.
நான்காம் வகுப்பில் எப்சிபா டீச்சர் குள்ளமான உருவத்தில் திருநெல்வேலி வழக்கு மொழியில் அதிர அதிர பாடம் நடத்துவார். அடுத்த வருடம்
இ.பெ.தொ உயர்நிலை பள்ளி ஆறாம் வகுப்புக்கு பாரதி டீச்சர்
இளமையாக எளிமையாக அக்கா என்று அழைக்கத் தோன்றும். என்னை முதன்முதல் மேடை நாடகத்தில் ஆண் வேடம் பூண்டு தமிழில் உரக்க பேசி நடிக்க வைத்து பார்வையாளர் பயத்தை போக்கியவர். தமிழ் ஐயா முனுசாமி சார், சிரிக்க வைத்து தமிழ் செய்யுள்களை திரும்பி பார்க்க வைத்தவர்.
ஏழாம் வகுப்பில் கோவிந்தம்மாள் டீச்சர் , பெரிய லஞ்ச் பேக், தூக்க நாங்கள் கூடவே மூச்சிரைக்க நடப்போம்.
எட்டாம் வகுப்பு ஜாய்ஸ் டீச்சர் பூகோளம் நன்றாக எடுத்து ஊக்க படுத்துவார். இந்திய மாநிலங்கள், தமிழ் மாவட்டங்கள் தொழிற்துறை வாரியாக வரைபடத்தில் படித்தது எப்போதும் உதவியாக இருந்தது.
ஒன்பது, பத்து, பதினோராம் வகுப்பு ( நாங்கள் தான் கடைசி பேட்ச்) 3 க்கும் அலமேலு வகுப்பாசிரியர் மற்றும் இயற்பியல்,ஜோன் ஆஃப் ஆர்க் மெக்கடோ கணக்கு, பொன்னம்மாள் தமிழ், கீதா அறிவியல், காமாட்சி வரலாறு புவியியல் இவர்கள்தான்.
வரலாறு பாடத்தில் ஆர்வம் குறைந்ததிற்கு டீச்சர் மட்டுமே காரணம் இல்லை.
கீதா டீச்சருக்கு நாங்கள் வைத்த பெயர் பச்சை கிளி. அழகாக இருப்பார். கிளி போலவே கழுத்தை திருப்பாமல் முழுதாக திரும்பி பார்த்து பாடம் எடுப்பார். எனக்கு உயிரியல் பாடம் மிகவும் பிடிக்க இவர்தான் காரணம்.அலமேலு மிஸ்ஸால்தான் ஆங்கிலம் புரிந்து படித்தேன். பொன்னம்மாள் அம்மாவால்தான் தமிழ் மெய்பாட்டுரைவள போட்டியில் கலந்து பரிசும் பெற்றேன்.
ஏன் ஜோன்ஸ் டீச்சர் கடைசியில் சொல்கிறேன் என்றால் அவர் என் உயிர்..
பவுடர், செண்ட், விதவிதமான கம்மல்,புடவை அணிந்தது மட்டுமல்ல,
கணக்கு பாடத்தை தூத்துக்குடி ஸ்லாங்கில் அவர் எடுத்த விதம் எனை மிகவும் கவர்ந்து விட்டது. வகுப்பறையில் பாராட்டுவது, முந்திரி கொட்டை என்று திட்டுவது போல் கோபித்தல், உரிமையோடு காது திருகி கண்டித்தல், பாடங்களை திரும்ப திரும்ப எழுத வைத்து அணைவருக்கும் ஆர்வம் வரவைத்தது என்று இவரை நினைத்தாலே நெஞ்சம் நிறைந்து விடும்.
நமை பெற்ற பெற்றோர் ஒருபுறம் , நம் ஆசிரியர்கள் ஒருபுறம் செப்பனிட
நல்ல பாதையில் நடந்திட
வழிகாட்டிய கலங்கரை விளக்கம். என்றும் மறவாமல் கூறுவோம் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
🙏🙏🙏🙏
A M Shanthi.
Old messages just noticed