23/08/2025
அஹதிய்யா சுற்றுலா காலி கோட்டை விஜயம்.07 & 08 காலி சோலையில் காணப்படும் முபாரக் மௌலானா ஸியாரத் தரிசிப்பு மற்றும் வீடு திரும்பல்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அஹதிய்யா சுற்றுலாவின் ஓரங்கமாக காலி கோட்டையை பார்ப்பதற்கு பயணம் மேற்கொண்டிருந்தோம்.
அங்கு விசேடமாக யாரும் பொதுவாக செல்லாத யாருக்கும் இலகுவாக செல்ல கிடைக்காத ஒரு ஸியாரம் கோட்டையின் கீழே அமையப்பெற்றுள்ள கடலோரமாக அமைந்துள்ளதை காணக்கூடியதாக இருந்தது.
இதன் நாலா சுற்றுப்பகுதியும் கருங்கற்பாறைகளினால் சூழப்பட்டுள்ளது.மேலும் விசேடமாக இதனை அண்மித்து ஒரு கிணறு காணப்படுகிறது இந்த கிணற்றின் விசேடம் என்னவென்றால் கடலோடு 10 மீற்றராவது இடைவெளி இல்லாமல் மிகவும் நெருக்கமாக காணப்படும் இதன் நீரில் எந்த வித உப்புத்தன்மையோ, அல்லது குடிக்க முடியாத கியுள் தன்மையோ காணப்படாமல் நமது ஊர் கிணற்றில் காணப்படும் தூய்மையான சுவையோ கியுளோ உவர்ப்போ இல்லாமல் மிகவும் மதுரமான நீராக காணப்படுவதாகும்.
பூவோடு சேர்ந்த நாறும் நறுமணம் பெறுவது போல் இந்த இடத்தில் காணப்படும் இறைநேசரின் காரணமாக இந்த கிணறு இவ்வாறு அற்புதமான முறையில் விசேடத்துவம் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த ஸியாரம் எவ்வாறு அக்காலத்தில் கற்பாறைகளை குடைந்து தோண்டப்பட்டது என்பதும் அங்கு கடலின் பாதிப்புகள் இன்றி இன்று வரையிலும் பாதுகாக்கப்படுகிறது என்பதும் அற்புதமானதாகும்.
இந்த இடத்தை பற்றி நன்கு அறிந்த எம்மோடு சுற்றுலாவில் சென்ற அஹதிய்யா ஆசிரியர் அப்துல் பாரி ஆவியின் வழிகாட்டலிலும் அப்துல் கரீம் மௌலவி அவர்களின் விசேட வேண்டுகோளின் அடிப்படையில் பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்றே நமக்கும் நமது அஹதிய்யா பிள்ளைகளுக்கும் இந்த இடத்தை காண்பிப்பதற்கும் அந்த கிணற்றில் நீர் அருந்தி பார்ப்பதற்கும் சந்தர்ப்பம் கிட்டியது.
உண்மையில் அனைவரும் போய் பார்க்க வேண்டிய மிகவும் அற்புதமான இடமாகும் ஆனால் இலங்கை இராணுவத்தினரால் குறித்த இடம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தனி நபர்களுக்கு போய் பார்க்கும் வாய்ப்பு குறைவு ஒரு குழுவாக அதிக எண்ணிக்கையில் கொண்டவர்களுடன் பாதுகாப்பு தரப்பினரின் உரிய அனுமதியை பெற்றே இதற்கு செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து காலி கோட்டையில் உள்ள ஒல்லாந்தரின் சிறையை பார்க்க சென்றோம் சுமார் 40 முதல் 50 அடிகள் ஆழத்தில் நான்கு பக்கங்களாலும் பெரும் சுவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு அந்த சிறை கட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இதனையடுத்து இரவு மக்ரிப் மற்றும் இஷா தொழுகை கோட்டைப் பள்ளியில் ஜமாஅத்துடன் நிறைவேற்றப்பட்டு இரவு சாப்பாட்டுடன் அங்கிருந்து
காலி சோலையில் காணப்படும் நபவிய்யதுல் காதிரிய்யாவின் ஸ்தாபகரும் குறித்த தரீக்காவை இலங்கையில் அஷ்ஷெய்ககு முஸ்தபா இப்னு பாவா ஆதம் ரஹ்மதுள்ளாஹ் அவர்களுக்கு வழங்கியவருமாகிய யெமனை சேர்ந்த அஷ்ஷெய்க் முபாரக் மௌலானா நாயகம் அவர்களின் ஸியாரத் ஷரீபுக்கு சென்று பாத்திஹா ஓதி சுற்றுலாவை நிறைவு செய்து வீடு திரும்பினோம்.
வரும் வழியே கௌரவ இக்ராம் பாஸி ஹஸ்ரத் அவர்களின் ஏற்பாட்டில் எல்லோருக்கும் நெஸ்கபே எடுத்து கொடுத்து மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் நம்மை நல்ல முறையில் உபசரிப்பு செய்து வழியனுப்பி வைத்தார்கள் அல்லாஹ் அவர்களின் விருந்தோம்பல் ஐ பொருந்தி கொண்டு மேலான நற்கூலியை வழங்குவானாகவும்.
மேலும் காலியில் இருந்து மாணவர்களுக்கு தேவையான இரவு உணவை கொண்டு வந்து கொடுப்பதிலும், காலியில் பல்வேறு இடங்களுக்கும் செல்வதற்கு உரிய பயண வழிகாட்டியாகவும் எமது அஹதிய்யா பாடசாலை முன்னால் ஆசிரியர் சகோதரர் அப்துல் கரீம் மௌலவி அவர்களுக்கும் அல்லாஹ் அவனது மேலான நற்கூலியை வழங்கியருள்வானாகவும்.
இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்வதில் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ், அதிபர் இக்ராம் அஹ்மத், ஆசிரியர் பவாஸ், பொருளாளர் லுதுபுள்ளாஹ், செயலாளர் ஹுஸ்னி, சகோதரர் பாயிக் மற்றும் இஸ்மாயில் ஆலிம் போன்றோர்களுக்கும் , காலை உணவு வழங்கி எம்மை நகர சபைக்கு அழைத்து கௌரவித்த நகரமேயர் அப்ராஸ் அவர்களுக்கும் மற்றும் அவரது சகோதரர் அஷ்கர் அவர்களுக்கும்,
முழு நேர வழிகாட்டியாகவும் மகத்தான உபசரிப்பாளராகவும்,நம்மை கௌரவத்தோடு அழைத்து கௌரவமான முறையில் கவனித்து வீடு திரும்பும் வரைக்கும் நம்மோடு ஒன்றாக சுற்றுலாவில் இணைந்து உதவி உபகாரம் புரிந்த மாத்தறை மீரா அஹதிய்யா பாடசாலை அதிபர் மௌலவி இக்ராம் பாஸி அவர்களுக்கும்,அந்த அஹதிய்யா ஆசிரியர்களுக்கும், அப்துல் கரீம் மௌலவி அவர்களுக்கும் மேலும் யாரெல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த சுற்றுலா வெற்றி கரமாக அமைவதற்கு உதவினார்களோ அவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் நல்ல முறையில் சென்று வரும் வரைக்கும் ஒத்துழைப்பு வழங்கிய மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் எமது அஹதிய்யா பாடசாலை சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்லாஹ் உங்கள் சேவைகளை ஏற்று மேலான நற்கூலியை ஈருலகிலும் வழங்குவானாகவும் ஆமீன்.
தொகுப்பு
எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்
ஆசிரியர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்
அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலை.