20/06/2023
*கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு*
கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 19.06.2023 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை 21.06.2023 தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர்த்த அனைத்து பாடங்களுக்குமான கலந்ததாவில் 230 கட் ஆஃப் மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்ற விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவியரும் பங்கேற்கலாம்.
பி.ஏ. பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், பொதுத்துறை ஆட்சியியல், பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தொழில்முறை வேதியியல், கணிணி அறிவியல், கணிணிப் பயன்பாட்டியல், தாவரவியல், விலங்கியல், உளவியல், நுண்ணுயிரியியல், புள்ளியியல் மற்றும் காணொலிக் காட்சித் தொடர்பியல் ஆகிய அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதேபோல பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்திற்கு 23.06.2023 அன்றே கலந்தாய்வு நடைபெறுகிறது. பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஆங்கில பாடத்தில் 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவியரும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
மாணவர்கள் கலந்தாய்வு நாட்களில் காலை 9.30 மணிக்கு முன்னதாகவே கல்லூரியின் சேர்க்கை அரங்கில் இருத்தல் வேண்டும். தாமதமாக வருபவர்கள் அந்த நேரத்தில் சென்று கொண்டிருக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கைக்காக அனுமதிக்கப்படுவார்கள்
கலந்தாய்வில் பங்குபெறுவோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், பத்தாம், பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்கள், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டையின் இரண்டு நகல்கள் மற்றும் உரிய சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றைக் கட்டாயமாக கொண்டு வரவேண்டும்.
விண்ணப்பித்த மாணாக்கர்கள் அனைவருக்கும் சேர்க்கை கலந்தாய்வு குறித்த விவரம் மின்னஞ்சல் வாயிலாவும், மாணாக்கர்களின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், 2023-24 கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கை கலந்தாய்வு குறித்த அனைத்து விவரங்களும் www.pacc.in என்ற கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு அறியலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்.....