10/01/2026
வள்ளியூர் TTN கல்வி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 10.09.2025 பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த TTN கல்வி குழுமத்தின் தலைவர் Er.T.லாரன்ஸ் அவர்கள் மாணவர்களை வரவேற்று பேசிய போது இப்போட்டியில் பங்கு பெற்ற அனைத்து பள்ளி மாணவர்களும் கிரிக்கெட் பயிற்சியை பெறுவதற்கு வசதியாக கிரிக்கெட் சார்ந்த உபகரணங்களை இலவசமாக வழங்கினார்கள். இப்போட்டியில் முதல் இடத்தைப் பெற்று இராதாபுரம் NVC அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 7000/- ரூபாயை பரிசு தொகையாக பெற்றுக் கொண்டனர், திசையன்விளை சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தை பள்ளி பெற்றுக் கொண்டனர் அவர்களுக்கு 5000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது, மூன்றாம் இடம் பிடித்த பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 3000 ரூபாய் வழங்கப்பட்டது, மேலும் நான்காம் இடம் பிடித்த ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரியின் சார்பாக பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய கல்லூரியின் முதல்வர் முனைவர். G.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் அவர்கள் மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும் கூறி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் தாளாளர் திருமதி.ஹெலன் லாரன்ஸ் அவர்களும், மேலும் நேரு நர்சிங் கல்லூரி முதல்வர், மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர், மற்றும் குளோப் பப்ளிக் ஸ்கூல் முதல்வர் அவர்களும் பாராட்டி பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்கள். கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் திரு.முகமது இர்பாம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். போட்டிக்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் திரு சுந்தர் அவர்கள் செய்திருந்தார்கள்.