Annai Poopathi Tamilsk Kultursenter

Annai Poopathi Tamilsk Kultursenter Kontaktinformasjon, kart og veibeskrivelse, kontaktskjema, åpningstider, tjenester, stjerner, bilder, videoer og kunngjøringer fra Annai Poopathi Tamilsk Kultursenter, Nedre rommen 3, Oslo.

18/01/2023

Et samstemt norsk analytikerkorps tror renten holdes uendret til mars, men flere internasjonale storbanker regner med at Norges Bank hever renten torsdag.

10/01/2020

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் இடஒதுக்கீட்டு முறையும் இருக்காது

`பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற கட்டண முறையும் இருக்காது. இட ஒதுக்கீட்டு முறையும் இருக்காது. இதுதான் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு `இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்’ அந்தஸ்து வழங்குவதில் உள்ள அரசியல்.’

அண்ணா பல்கலை கழகம்

இந்தியாவின் முதல் பொறியியல் பல்கலைக்கழகம் என்ற பெருமை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உண்டு. தேசத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இந்தப் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கப்போவதாகத் தமிழக அரசு அண்மையில் கூறியிருந்தது. தொன்மை வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தை 'மாண்புமிகு அண்ணா கல்வி நிறுவனம் (Anna Institute of Eminence) என்றும், அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) என்றும் இரண்டாகப் பிரிக்க உள்ளதாகவும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அண்ணா பல்கலைக்கழகச் சட்டம் 1978-ஐ திருத்தி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ள தமிழக அரசின் அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய கல்வியாளர் ஜவஹர், "உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தகுதி வாய்ந்த பல்கலைக்கழகங்களைத் தேர்வுசெய்து 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்'அந்தஸ்து வழங்க உள்ளது மத்திய அரசு. அந்த அடிப்படையில்தான் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்' (Anna Institute of Eminence) என்ற அந்தஸ்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதற்கு, நாம் எந்தத் தடையும் கூறப்போவதில்லை. ஆனால், மத்திய அரசு இதை எப்படி வழங்கப்போகிறது என்பதில்தான் சிக்கல்கள் உள்ளன.

இட ஒதுக்கீடு முறையே இருக்காது

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்' அந்தஸ்து வழங்கப்பட்டால், அது தன்னாட்சி பெற்ற அமைப்பாகச் செயல்பட முடியும். ஆனால், மத்திய அரசு அந்தப் பல்கலைக்கழகத்துக்கு நிதி கொடுப்பதால் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டே செயல்பட்டாக வேண்டும். கல்லூரியின் கட்டணத்தை கல்லூரியே நிர்ணயம் செய்துகொள்ளலாம் அதற்கு எந்த தடையும் கிடையாது.

கலந்தாய்வு

குறிப்பாக, மத்தியில் பி.ஜே.பி-தான் ஆட்சி செய்கிறது. அந்தக் கட்சி, ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் தன்னுடைய கட்சியின் சித்தாந்தத்தை எந்த அளவில் திணிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியான வழிமுறைகள் சிறப்பு அந்தஸ்து பெற்ற புதிய பல்கலைக்கழகத்தில் நடைமுறை ஆகும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கொள்கை கோட்பாடுகள், ஆராய்ச்சிகள், பாடப்பிரிவுகள் என ஒட்டுமொத்தமாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அந்தப் பல்கலைக்கழகத்தில் நடைமுறையாகின்ற ஒரு சூழல் உருவாகும். இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற கட்டண முறையும் இருக்காது. இட ஒதுக்கீட்டு முறையும் இருக்காது. இதுதான் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு' இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் 'அந்தஸ்து வழங்குவதில் உள்ள அரசியல். குறிப்பாக, ஒட்டு மொத்தப் பல்கலைக்கழகத்தின் இயக்கத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சிதான் இது.

எமினன்ஸ்' அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகத்தின் நிலை இது என்றால், அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து வெறும் அண்ணாப் பல்கலைக்கழகம் என்று புதிதாக உருவாகும் பல்கலைக்கழகத்தின் நிலை மிக மோசமானதாக இருக்கும்.

அண்ணா பல்கலைக்கழகம்

குறிப்பாக, ஸ்த்திரதன்மையுடன்கூடிய கட்டமைப்புகளை உடையது நமது அண்ணா பல்கலைக்கழகம். கிண்டி கேம்பஸ், எம்.ஐ.டி கேம்பஸ் போன்ற சிறப்புமிக்க ஆராய்ச்சிக் கூடங்கள், அனுபவமுள்ள ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் என அறிவார்ந்த நிலையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை இந்த எமினன்ஸ் அந்தஸ்துக்காக, மத்திய அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு புதிய பல்கலைக்கழகத்தைத் தொடங்குவது கரும்பைக் கொடுத்துவிட்டு சக்கையை நாம் வைத்திருப்பதற்குச் சமம்.

எனவே, தொடங்கப்படுகிற புதிய பல்கலைக்கழகத்தால் இந்த மாநில மாணவர்களுக்கு என்ன நன்மை விளையும்? அந்தப் புதிய பல்கலைக்கழகத்தில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இருப்பார்களா, தரமான ஆராய்ச்சிக் கூடங்கள்தான் இருக்குமா? இப்படி, பலகேள்விகள் உள்ளன. ஒன்று மட்டும் மாறாமல் அதில் இருக்கும். இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கீழ் இயங்கி வந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும். வேறு எந்தச் சிறப்பம்சமும் அதில் இருக்காது என்பதே உண்மை.

மத்திய அரசு

இன்னும் எளிமையாகச் சொன்னால், பள்ளிக் கல்வியில், சி.பி.எஸ்.இ-க்கும் மெட்டிரிகுலேஷனுக்கும் உள்ள வேறுபாட்டைத்தான் இங்கு நாம் காண முடியும்' ஒருபுறம் இன்ஸ்டியூட் ஆஃப் எமினன்ஸ்"அந்தஸ்து பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏழை எளிய மக்கள் நுழையவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். மற்றொருபுறம் புதிதாகத் தொடங்கப்படுகிற அண்ணா பல்கலைக்கழகத்தில் தேவையான கட்டமைப்புகளே இருக்காது

கா . புவனேஸ்வரி

28/12/2016

அமரர் செல்வராகவன்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசா
உளம்கொண்டான் நல்லொன்று வைத்து - நலம்பெறப்
பேசும் இயல்பினன் தாயகத்து வள்ளல்
பசுமை நினைவை நினைந்து
செல்வரா கவன்செல்வ நாயகம்
சொல்லும் சொற்கள் நயம்
நல்ல நடிகன் நகைச்சுவைத்
தென்றல் வந்து துருவத்து
வாடைக்குள் வாசம் வீசியமணம்
அடேய் நீ
அன்னைபூபதி தமிழ்க்கலைக் கூடத்து
ஆட்டக்குதிரை ஆடியாடி அனைவரையும்
மகிழ்வித்த விதம் அற்புதம்
தையிலே தொடங்கி மார்கழியில்
முடிவடையும் பண்டிகைகளில்
தமிழர்திருநாள் நத்தார் பெருநாள்
நாள்களிலே நீயல்லவோ கதாநாயகம்
ஐயனேயுன் மரணம் கேட்டு
பதைபதைத்தது பழகியவர் நெஞ்சு
இன்றுள்ள குழந்தைகள் அழைத்தனர்
நத்தார் தாத்தா தாதாவென்று
நீ வரவில்லை
கூற்று விடவில்லை தோழா
இராகவா இன்று
எங்கெல்லாம் நத்தாரோ
அங்கெல்லாம் உன்னையே
நினைக்கச்சொல்லும் அகம்
தமிழர் திருநாளும் அணியம்
ஆட்டக்குதிரைகள் ஆடவிடுக்கும்
ஆனாலுன் குதிரை காத்திருக்கும்
ஆனால் நீ?
நண்பனே! மருத்துவச் சேவகா
பூமிக்கு வந்து போகும் நிபிறுபோல்
நகைச்சுவைப் பதிவோடு
நீயும் வந்து போகிறாய்
வகுத்தவுன் பாதை
உனக்காகவே இடைவெளியா யிருக்கும்
சென்றுவா நண்பா சென்றுவா
அமைதி அமைதி அமைதி அமைதியே!

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்
தமிழர்வள ஆலோசனை மையம்

ஆக்கம்
உதயன்

01/09/2016

http://www.trvs.no/node/31

அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்க்குமான முக்கிய அறிவித்தல். புதிய அனுபவம் மிக்க ஆசிரியர்களோடு புது உத்வேகத்தோடு ஆரம்பமாகும் உதவிப் பாடம் திட்டம் / 2016 Leksehjelp எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் 4 ம் வகுப்பில் இருந்து

அறிவுச் சமூகத்தைப் படைப்போம் வாருங்கள்!அறிவுச் சமூகத்தைப் படைப்போம் வாருங்கள்!அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அரணாய் க...
24/08/2016

அறிவுச் சமூகத்தைப் படைப்போம் வாருங்கள்!

அறிவுச் சமூகத்தைப் படைப்போம் வாருங்கள்!
அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அரணாய் காத்து நிற்கின்ற ஆசிரியர்கள் மற்றும்
பணியாளர்களை புதிய கல்வியாண்டில் கைகுலுக்கி வரவேற்கிறோம்! உங்கள் கரங்களில்
தமிழ்ப் பூங்கொத்தை மகிழ்வோடு கொடுக்கிறோம்!
ஒவ்வொரு பிள்ளையையும் உலகிற்கு அறிமுகம் செய்வோர் பெற்றோர்! உலகையே
அறிமுகம் செய்பவர் ஆசிரியர்! மாணவப் பிள்ளைகளுக்கு தாய் – தந்தையர் இருக்கலாம்
ஆனால் தாயுமானவராய் இருப்பது ஆசிரியர் மட்டுமே!
ஆசிரியர் பணி என்பது வெறும் பணி மட்டுமல்ல அது ஓர் உயரியத் தொண்டு. மாணவர்களின்
அறியாமை இருள் நீக்கி; அவர்களது வாழ்வில் புதிய ஒளியை ஏற்றும் பெருந்தொண்டு!
ஆதலால்தான் "எழுத்தறிவித்தவன் இறைவன்' என்கிறார்கள். "மாணவர்கள் கல் என்றால்
ஆசிரியர்கள் சிற்பிகள்'

ஒரு தேசத்தின் தலையெழுத்தை வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு
விழுக்காடு உண்மை. தாய் தந்தையை விட ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம்
செலவழிக்கிறது. எனவே தான் ஆசிரியர்கள் இரண்டாவது தாய் என அழைக்கப்படுகின்றனர்.
தன்னிடம் படிக்கும் மாணவர்களை இச்சமூகத்திற்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற
வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றி
தான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி.

மாணவர்களை படிப்பாளியாக படைப்பாளியாக மாற்றுகின்ற ஆற்றல் ஆசிரியர்களுக்கு மட்டுமே
உண்டு! புத்தகங்களை வாசிக்கும் தொடர்பு பாடசாலையிலிருந்தே பயணிக்கிறது!
“புத்தகங்கத்திலுள்ள எழுத்துக்களை மேலிருந்து கீழ் நோக்கி படிக்கிறோம்! புத்தகங்கள்
நம்மை கீழிலிருந்து மேலாக உயர்த்துகிறது!
எமது அன்னைபூபதி தமிழ்க் கலைக் கூடத்தின் சிற்பிகளாய் நிற்கின்ற ஆசிரியர்கள்
சிற்பங்களாய் மாணவச்செல்வங்களை செதுக்கிட உங்கள் கைகளில் அறிவொளி எனும்
உளி இருக்கிறது! புதிய ஒளியில் புதிய வழியை காட்டுங்கள். நீங்களே.. அறிவுச் சமூகத்தின்
திசைக்காட்டி!

தாய்மொழியை, தாய்மண்ணை நேசிக்கும் பண்பை மாணவர்களிடம் வளர்த்தெடுக்க
ஆசிரியர்களாகிய நீங்களே எதிர்கால சமூகத்தை உருவாக்குகின்ற ஊட்டச்சத்து! உங்கள்
உயர்ந்த பணியைத் தொடர மாணவச் செல்வங்களுக்கு உயர்ந்த இலட்சியத்தை புகட்ட
மீண்டும் உங்களை மனமுகர்ந்து வரவேற்கின்றோம்!
அறிவுச்சமூகத்தைப் படைப்போம்! நாம் உலகம் முழுவதும் முளைப்போம்!!

10/08/2016

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் (பிரான்ஸ்) நடாத்தப்பட்ட பட்டயக்கல்வி தேர்வின் முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கிடைக்கப்பெற்ற முடிவுகளை தங்களுக்கு அனுப்ப விபரங்களின் கோரப்படுகின்றது.

10/08/2016

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் (பிரான்ஸ்) நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்ப் பொதுத்தேர்வின் முடிவுகள் 22.08.16 அன்று வெளியிடப்படும். தங்கள் வளாகத்தில் தமிழ்ப்பாடங்கள் ஆரம்பிக்கும் போது தங்கள் புள்ளிகளை தெரிந்துகொள்ளவும்.

புலம் பெர்யர் சூழலில் வளரும் தமிழ் மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்க , அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப  தமிழ் கற்பிக்...
27/01/2016

புலம் பெர்யர் சூழலில் வளரும் தமிழ் மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்க , அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப தமிழ் கற்பிக்கும் முயற்சியின் ஒரு படியாக றொம்மன் வளாக ஆசிரியர்களால் உருவாக்கப்பட தமிழ் வாசிப்பு நூல்கள் பொங்கல் விழா 2016 இல் வெளியிடப்பட்டன.

Adresse

Nedre Rommen 3
Oslo
0988

Telefon

+4740721239

Nettsted

Varslinger

Vær den første som vet og la oss sende deg en e-post når Annai Poopathi Tamilsk Kultursenter legger inn nyheter og kampanjer. Din e-postadresse vil ikke bli brukt til noe annet formål, og du kan når som helst melde deg av.

Kontakt Universitetet

Send en melding til Annai Poopathi Tamilsk Kultursenter:

Del